வெள்ளி, 4 ஜூன், 2021

 


தொட்டுத் தொட்டு பேசுகிறாள்
நாளெல்லாம் நட்பு கொண்டு
கைப்பேசியைத் தழுவுகிறாள்
இடையிடையே நழுவுகிறாள்
நாடி வந்த நட்பின் தோள்களை
ஏன் மறந்தாள்...

இறக்கி வைக்காத சுமைகளோடு
கொடுக்க வந்த புன்னகையோடு
இன்றும் கடந்து போகிறேன்
நாளை என்ற நம்பிக்கையோடு...

தூரத்தில் இருந்தாலும்
துயரத்தில் இருக்கும் போது
நிலவும் சூரியனும் நீயும்
என்னோடே இருப்பதாய்
நினைத்துக் கொள்கிறேன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக