தொட்டுத் தொட்டு பேசுகிறாள்
நாளெல்லாம் நட்பு கொண்டு
கைப்பேசியைத் தழுவுகிறாள்
இடையிடையே நழுவுகிறாள்
நாடி வந்த நட்பின் தோள்களை
ஏன் மறந்தாள்...
இறக்கி வைக்காத சுமைகளோடு
கொடுக்க வந்த புன்னகையோடு
இன்றும் கடந்து போகிறேன்
நாளை என்ற நம்பிக்கையோடு...
தூரத்தில் இருந்தாலும்
துயரத்தில் இருக்கும் போது
நிலவும் சூரியனும் நீயும்
என்னோடே இருப்பதாய்
நினைத்துக் கொள்கிறேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக