பட்டாம்பூச்சிகளை
ஏன் மறைந்து மறைந்து
பார்க்க வேண்டும்
அதன் அழகு மேனியை
ஏன் ஆடையிட்டு
மறைக்க வேண்டும்
தேன் குடிக்கப் பூவிருக்க
ஏன் தேர்ந்தெடுப்பை
தடுக்க வேண்டும்
துன்பம் எனும் கூட்டுக்குள்
தன்னை மூடிக் கொண்ட
மனிதப் பட்டாம்பூச்சி
சிறகு வளர்த்து
சிறையை உடைத்தால்
பறந்து திரியும் பட்டாம்பூச்சி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக