மழைக்கால சங்கீதம்
தவளைகள் சந்தோஷம்
இரவெல்லாம் கொண்டாட்டம்
ஈரத்தில் விளையாட்டும்
நீரில் தாவிக் குதிக்கும்
சில மணித்துளிகள்
சிறகில்லாமல் பறக்கும்
தன்னைத் தானே புதைக்கும்
நீர் மேல் கண்கள் பூக்கும்
யாரும் அருகில் வர
ஒளிந்து விளையாடும்
'சொலக்' என்ற சப்த
தடயம் விட்டுப் போகும்
எப்போதோ உன் மீது
விட்டெரிந்தக் கற்கள்
என்னுள்ளே கரைகிறது
கண்ணீராய் வழிகிறது
தினமும் வருகிறேன் நண்பா
ஒளிந்து விளையாடுவோம்
மழை எனக்காக மட்டுமில்லை
இனி நமக்காக வேண்டுவோம்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக