வியாழன், 17 ஜூன், 2021

 


உலகிலுள்ள
ரோஜாக்களும் பெண்களும்
அழகையும்
அதைக் காக்க
முள்ளையும் கொண்டிருந்தும்
ஆணின் கைகள்
துணிந்து விடுகின்றன...

கண்களை ஈர்த்து
கைகளை பதம் பார்த்து
உதிரம் உறிஞ்சிட
மலரும் இதழ்கள்
மணம் வீசும்
மனதோடு மௌன மொழி
பேசும்...

விரல்கள்
தாங்க விழைகிறது
இதயம்
முடியாமல் துடிக்கிறது...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக