சதா
சிவனென்று
நெற்றிக்கண் கவிதைகளால்
விடாமல் சுட்டெரித்து
மனதை
சுடலையிலிருந்து
சொர்க்கத்திற்கு அனுப்புகிறாய்...
வானத்தில்
வழி அனுப்பிய
மனங்களையா எண்ணுகிறாய்...
யாருக்குத் தெரியும்
நட்சத்திரங்களை
நரகத்திற்கு கொண்டு வரக்கூட
நீ பார்த்துக்கொண்டு இருக்கலாம்...
தோளில் துண்டு போட்ட
வெறும் உடம்புக்காரனுக்கு
வானம் போய்வர
எந்தக் கடவுச்சீட்டும் தேவையில்லை
வெள்ளைச் சர்க்கரையும் கல்கண்டும்
நீ கொண்டுவந்த நட்சத்திரங்களா
நரகம் வந்தும் இனிக்கிறது...
கிட்ட வந்தும்
நட்சத்திரங்களை
எண்ணிவிட முடியவில்லை
தூரம் இருந்தாலும்
உன்னை
எண்ணாமல் இருக்க முடியவில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக