உன் வார்த்தைகளில்
தூரம் தெரிகிறது
உன் கண்கள்
மிக நெருக்கம் ஆகிறது...
என் வார்த்தைகளைக் காணவில்லை
என் கால்கள் நடக்கும்
எனும் நினைவுமில்லை
உன் கண்கள் விழுங்க
என்னை மொத்தமாய்த் தந்து நிற்கிறேன்
உன் கண்கள் மெதுமெதுவாக
என்னைக் காணாமல் செய்கின்றது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக