தாகம்
நீரைக் கேட்குது
பசி
உணவைக் கேட்குது
பாசம்
உறவைக் கேட்குது
அன்பு
நட்பைக் கேட்குது
காதல்
காதலியைக் கேட்குது
காமம்
உடலைக் கேட்குது
நிறைந்தவுடன் நீங்கிவிடும்
நிம்மதியாய்த் தூங்கிவிடும்
தீராது தீராது
பணத்தை
எது கேட்குது
நீங்காமல் தூங்காமல்
அனுதினமும் வாட்டுது
இயற்கை
இது இல்லை
கானலுக்கு
ஏது எல்லை...
இனி
செயற்கைத்
தேவையில்லை
இயற்கை
என்னை எழுப்பும் வரை
நிம்மதியாய் உறங்குகிறேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக