செவ்வாய், 30 மார்ச், 2021

 


தாகம்
நீரைக் கேட்குது

பசி
உணவைக் கேட்குது

பாசம்
உறவைக் கேட்குது

அன்பு
நட்பைக் கேட்குது

காதல்
காதலியைக் கேட்குது

காமம்
உடலைக் கேட்குது

நிறைந்தவுடன் நீங்கிவிடும்
நிம்மதியாய்த் தூங்கிவிடும்

தீராது தீராது
பணத்தை
எது கேட்குது

நீங்காமல் தூங்காமல்
அனுதினமும் வாட்டுது

இயற்கை
இது இல்லை
கானலுக்கு
ஏது எல்லை...

இனி
செயற்கைத்
தேவையில்லை

இயற்கை
என்னை எழுப்பும் வரை
நிம்மதியாய் உறங்குகிறேன்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக