செவ்வாய், 23 மார்ச், 2021

 


வானத் தாய்
மேக முந்தானை மூடி
நிலவுக்கு பாலூட்டுகிறாள்

நிலவைக் காட்டி
என் தாய்
சோறு ஊட்டுகிறாள்

நானும் நிலவும்
உறங்கிப் போனோம்
வானும் தாயும்
கண் விழித்தே இருந்தார்கள்
விடிந்து பார்க்கையிலும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக