பைத்தியமாய் மாறினால் தான் தெரிகிறது
சுற்றி நடப்பதெல்லாம் பைத்தியக்காரத் தனமாக
எல்லோரும் பைத்தியமாய் பார்க்கும் ஒருவன்
எல்லோரையும் பைத்தியமாய் பார்ப்பான்
ஆமாம்
அப்படித்தான் தெரிகிறது
என்ன சொன்னாலும் புரியாது பைத்தியங்களுக்கு...
புரிந்ததால் சில பைத்தியம்
புரியாமல் பல பைத்தியம்
எல்லாமே பைத்தியம்
உலகம்
கிறுக்குப் பிடித்துச் சுற்றுகிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக