பறக்காமல்
ஒரு பறவை
காத்திருந்தது
எனக்காக அல்ல
சிறகுக்காகா...
தாகம்
நீரைக் கேட்குது
பசி
உணவைக் கேட்குது
பாசம்
உறவைக் கேட்குது
அன்பு
நட்பைக் கேட்குது
காதல்
காதலியைக் கேட்குது
காமம்
உடலைக் கேட்குது
நிறைந்தவுடன் நீங்கிவிடும்
நிம்மதியாய்த் தூங்கிவிடும்
தீராது தீராது
பணத்தை
எது கேட்குது
நீங்காமல் தூங்காமல்
அனுதினமும் வாட்டுது
இயற்கை
இது இல்லை
கானலுக்கு
ஏது எல்லை...
இனி
செயற்கைத்
தேவையில்லை
இயற்கை
என்னை எழுப்பும் வரை
நிம்மதியாய் உறங்குகிறேன்...
பைத்தியமாய் மாறினால் தான் தெரிகிறது
சுற்றி நடப்பதெல்லாம் பைத்தியக்காரத் தனமாக
எல்லோரும் பைத்தியமாய் பார்க்கும் ஒருவன்
எல்லோரையும் பைத்தியமாய் பார்ப்பான்
ஆமாம்
அப்படித்தான் தெரிகிறது
என்ன சொன்னாலும் புரியாது பைத்தியங்களுக்கு...
புரிந்ததால் சில பைத்தியம்
புரியாமல் பல பைத்தியம்
எல்லாமே பைத்தியம்
உலகம்
கிறுக்குப் பிடித்துச் சுற்றுகிறது...