வெள்ளி, 8 நவம்பர், 2019

பழுத்த இலை விழும் வரையில்
கிளைகள் தள்ளி விடுவதில்லை
வீழ்ந்தும் சருகு உரமாக
பூக்கள் சேர்க்கும் உறவாக

தொட்டிச் செடிகள் வளர்க்கும் சமூகம்
ஈவு இரக்கம் இல்லாமல்
வெட்டி விடுகின்றனர் பாவம்
பாதிப் பழுத்த இலைகள்...

தொட்டில் கட்டியவர்களை
அவிழ்த்து விட்டுவிட்டு
ஆழ்ந்து உறங்குகிறார்கள்

தாலாட்டுப் பாடியவர்கள்
ஆழத்தில் உறங்குகிறார்கள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக