வெள்ளி, 1 நவம்பர், 2019

உணர்வுகள் வழி
பேசிய காலங்கள் மறைந்து
சைகைகளில்
பேசிய காலங்கள் தொலைந்து
வார்த்தைகளில்
பேசிய காலங்கள் கடந்து
காட்சிகள் வழி
பேசிக்கொண்டு இருக்கிறேன்
உன்னோடு

எங்கே
என்னோடு
யார் பேசுவாரோ...

நெருப்பு
காற்றில் ஊசலாடி
புகையாகி
சாம்பலாய் மீண்டும்
காற்றில் கரைந்து
காணாமல் போகிறது...

மறைந்த உணர்வுகளின் காலடியில்
மண்டியிட்டு அழுகிறேன்
இல்லாத கால்களை
ஈரம் எப்போது நனைக்கும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக