செவ்வாய், 5 நவம்பர், 2019

நாய்க்குட்டியுடன் குழந்தை

உன்னைச் சங்கிலியாலும்
என்னைக் கட்டுப்பாடுகளாலும்
கட்டிப் போட்டு வளர்க்கின்றார்கள்

அவர்களாவது
சுதந்திரமாக இருக்கிறார்களா...

வரம்பை
மீறாமல் இருப்பதற்கு
சின்ன வீட்டைக்
கட்டி இருக்கலாமே
இறைவன்

எதற்காக
இவ்வளவு பெரிய
உலகத்தைப் படைத்தான்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக