ஞாயிறு, 3 நவம்பர், 2019

ஆயிரம் அலைகளைத்
தாங்கியக் கடலென
சுருக்கங்கள் நிறைந்த
அந்தக் கிழவியை
நிலவொளி போல் தழுவி
முத்தமிட்டு அணைத்திருந்தேன்

விடியல் வந்து
எழுப்பி
வாசித்துக் காட்டியது
நூறு வருடம்
அவளோடு
வாழ்ந்துப் பார்த்த
என்
நெடுங் கனவை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக