திங்கள், 11 நவம்பர், 2019

படைத்தவனுக்கும் தெரிவதில்லை
பிரசவ வலி
வேதனைகள்...

ஓவியர்
அமைதியின்மையையோ
பேரமைதியையோ
விட்டுச் செல்லும்
ஓவியமும்


இசைஞர்
வேதனையையும்
பரவசத்தையும்
அதிர்வுகளாய் காற்றில் கலக்கும்
இசையும்

கவிஞர்
சிரிப்புடனோ
கண்ணீருடனோ
முடித்துக் கொள்ளும்
கவிதையும்

போல அல்ல...

தாய் ஈன்றெடுக்கும்
குழந்தை ஒரு
மரண வலி




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக