புதன், 20 நவம்பர், 2019


மழையினில்
உனைப் பார்க்க வருவேன்
மழையினில்
நீ காத்து இருப்பாய்

நனையாமல்
நான் வருவேன்
நனைந்து
நீ நடுங்கிடுவாய்

ஈரமில்லாதவன்
தலைத் துடைப்பாய்
இந்தப் பாறைக்கு ஏனோ
நீர் வடிப்பாய்

ஏதொன்றும் உணராமல் இருந்துவிட்டேன்
உயிரோடு உன்னை நான்
கொன்றுவிட்டேன்

நீ இல்லாது
நான் வாழும் இந்நாட்கள்
மனதைக் கடித்துக் குதறும்
ஆயிரம் செந்நாய்கள்

சுற்றிலும் உதிரம்
நினைவுகளாய் உதிரும்...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக