புதன், 6 நவம்பர், 2019

சிறகசைத்தும் பறக்க முடியாத
கடலின் மீது தினந்தோறும்
பறந்து செல்கின்றன பறவைகள்

தளும்பும் கடல் தழும்பை
கதிர் கொண்டு சேர்க்க
உப்புக் கரித்ததோ

வானம்
இறங்கி வந்து
முத்தமிடுகிறது

பாறைகளில் மோதினாலும்
கால்கள் மிதித்தாலும்
சிறகுகள் ஓய்வதில்லை

கடல்
சிறகசைத்துக் கொண்டே இருக்கிறது
காலமெல்லாம்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக