செவ்வாய், 19 நவம்பர், 2019


கால் முளைத்த
வெண் நுரைகள்
வெள்ளைக் குதிரை ஆனது

எத்தனை நாள் ஏக்கமிது
கரையைத் தாண்டி ஓடுது
யாரைச் சென்று தேடுது

கடிவாளம் இல்லை
கண் கட்டவில்லை
கட்டுப்படுத்துவது யாரோ...

சிறகு முளைத்த
என் மனச் சிட்டுக்குருவி
கீச்சிட்டு சொல்லியது

அது யாரென்று...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக