வெள்ளி, 29 நவம்பர், 2019

மண்
பூவையும் பெண்ணையும்
அழகாகவே வரைகிறது

இருவருமே சிரிப்பது
இதயத்திலிருந்து

பெண்
பூவை வரைகிறாள்

பூ
பெண்ணை வரைகிறது

இரண்டும் சேர்ந்த
இந்தக் கதம்பம்
என்னில்
உன்னை வரைகிறது
கண்கள் கரைகிறது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக