வெள்ளி, 8 நவம்பர், 2019

"தீவிரவாதம்"

தேவர்களைக் காத்தவன்
கடவுள் என்றால்
அசுரர்களைக் கொன்றவன்
யார்?

அசுரர்களைக் காக்கும்
கடவுள் எங்கே?

கடவுளைப் பற்றிப் பேசிப்பேசியே
இதயக் கோவிலை மறந்த
மனிதக் கடவுள்கள்

இதயத் தராசுகளில்
தீர்ப்புகள்
எந்தப் பக்கமும் சாய்வதில்லை...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக