ஒரு பீடியுண்டோ சகாவே...
ஓவியர் ஜீவாவின் புத்தகம்
வாங்கித் தருமாறு தம்பி கேட்டான்
ஒரு பொழுதெல்லாம்
தலைப்பு
தலையில் இங்கும் அங்கும் ஓடி
ஒரு கணத்தில்
தலையில்லாமல் தரையிறங்கியது இவ்வாறு...
"நீ புகைப்பிடிக்கும் 10 ரூபாயும்
நான் புகைவண்டிக்குக் கொடுக்கும் 10 ரூபாயும்
எப்படிச் சமமாகும்?
உன்னுடையது நரகத்திற்கும்
என்னுடையது நகரத்திற்கும்
உடலை நகர்த்தும்
நான் 10 ரூபாய் கொடுத்து
100 ரூபாய் வாங்கி வருவேன்
நாளை உனக்கும் எனக்கும் போக
மீதம் 80 குடும்பத்தை நகர்த்த...
நானும் புகை பிடித்தவன் தான்
நரகம் சென்று பார்த்தவன் தான்
இப்போது பிடிப்பதில்லை
இது சொர்க்கத்தின் கருணை
அறிவை விட்டவனுக்கு நிச்சயம் கிட்டும்...
வலி வலிமையான வாத்தியார்
மதி அளவு பேர் உருவெடுக்கும்
அருகிருந்து பார்த்தவன் நான் சொல்கிறேன்
வேண்டாம் தம்பி அந்த தரிசனம்
வீம்பு வேண்டாம் உன் அறிவை விடு
நீயும் சொர்க்கத்தின் கருணை பெறு"
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக