இடைவெளிப் பெருகப் பெருக
இதயம் வளர்ந்து வளர்ந்து
நெஞ்சை முட்டுகிறது...
சிறகு முளைத்து
பறந்து வரும்
வானம் பார்த்திரு...
கழுகை விட
கூர் பார்வை
பதுங்கினாலும் பார்த்துவிடும்...
இதுவரை நடித்தது போல
இனியும் நடித்து
இயல்பாய் துடிக்கவிடு...
இறுதிவரை இறுதிவரை
மௌனமாய் மௌனமாய்
உன் நினைவைப் படிக்கவிடு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக