நான் தொடும் முன்னே
என் நிழல் தொட்டு
நாணும் பெண்ணே
உன் வெட்கம்
என் சொர்க்கம்
நெஞ்சில்
வானவில் பூக்கிறது...
விழி மொட்டும்
இமை மெட்டும்
இதய
வீணை மீட்டியது...
ரயில்
பின்னணி பாடியது
வெயில்
இரவுடன் கூடியது
அந்தி மாலை
அந்த வேளை
இந்த பாலை
ஆனது சோலை...
மறு நொடியில்
காட்சி மாறியது
கண்கள் ஊறியது
சாரல் தூறியது
இறங்கிப் போகும்
பெண்ணே
இரக்கம் இல்லையோ
கண்ணே
பாதை மாறினாலும்
ஓடும் ஓடை
ராகம் மாறவில்லை
ஏன் கண்டேன்
ஆசை கொண்டேன்
ஏங்கி நின்றேன்
உள்ளம் நொந்தேன்...
நான் தொடும் முன்னே...
நான் தொடும் முன்னே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக