வெள்ளி, 20 செப்டம்பர், 2024


கண்களின் உள்ளிருந்து மலர்ந்து விரிகிறதா? 

கண்களின் உள் வந்து யாவும் குவிகிறதா? 

ஆரம்பமும் இல்லையா? 

முடிவும் இல்லையா? 

ஒன்று தான் இவ்வுலகா? 


உயிர் ஒன்றுதானா? 

மரணம் ஒன்றுதானா? 

நீ நான் என்றாலும்

யாவும் ஒன்றுதானா? 


மௌனமும் மீயொலியும் ஒன்றுதானா? 

இருளும் பேரொளியும் ஒன்றுதானா? 


அத்தனை துரோகமும் 

அத்தனை நம்பிக்கையும்

ஒன்றுதானா? 


அத்தனை குரோதமும்

அத்தனை அன்பும்

ஒன்றுதானா? 


உயிருக்கு ஒரு எல்லை

இருப்பதுபோல்

மரணத்தின் எல்லை ஒன்று

இருக்கிறதா? 


ஒன்றின் முன்

ஒன்று அழுது

ஒன்று சிரித்து

இருப்பதெல்லாம் ஒன்றா? 


ஒட்டுமொத்தக் கண்களும்

ஒன்றின் கண்களா? 

ஆதி இறைவனா? 

ஆதி சாத்தானா? 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக