மண்ணில்
ஒரு உயிர்
மறையும்போது
நீரில்
ஒரு உயிர்
பிறக்கிறது
நீரில்
ஒரு உயிர்
மறையும்போது
மண்ணில்
ஒரு உயிர்
பிறக்கிறது
வெளியில்
காற்று போய்விடாமல்
வெளியில் காற்று இருக்கிறது
காண முடியா
தூரம் விளங்க
உள்ளே வெளியே மறைகிறது
இடைவிடாமல்
இமைத்திடாமல்
நெருப்பு ஒன்று எரிகிறது
பஞ்சபூதம்
பச்சிளம் உயிராய்
உறங்கிக் கொண்டே சிரிக்கிறது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக