ஞாயிறு, 15 செப்டம்பர், 2024


மண்ணில்

ஒரு உயிர் 

மறையும்போது

நீரில்

ஒரு உயிர்

பிறக்கிறது


நீரில்

ஒரு உயிர்

மறையும்போது

மண்ணில்

ஒரு உயிர்

பிறக்கிறது


வெளியில் 

காற்று போய்விடாமல்

வெளியில் காற்று இருக்கிறது


காண முடியா

தூரம் விளங்க

உள்ளே வெளியே மறைகிறது


இடைவிடாமல்

இமைத்திடாமல்

நெருப்பு ஒன்று எரிகிறது


பஞ்சபூதம்

பச்சிளம் உயிராய்

உறங்கிக் கொண்டே சிரிக்கிறது...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக