வியாழன், 26 செப்டம்பர், 2024


கோவிலை நம்பி இருக்கும் புறாக்களுக்கும்

கோவிலை நம்பி இருக்கும் மனிதர்களுக்கும்

ஒரு போலயில்லை நம்பிக்கை


சர்ச்சு புறாக்கள்

மசுதிக்கும் கோவிலுக்கும் போய் வருவதுபோல

மனிதர்கள் போவதில்லை 


மனிதர்களுக்கு

ஒவ்வொரு கோவிலிலும்

ஒவ்வொரு கடவுள்


புறாக்களுக்கு

எல்லா கோவிலிலும்

ஒரே கடவுள்


கலக்கக் கூடாத யாவையும் கலந்து

இயற்கையைக் கெடுத்துக் கொண்டு

லட்டுக்கு நீதி கேட்டு அலையும் மனிதர்கள்


ஊழல் செய்து சிறை சென்று

பிணையில் வரும் கயவர்களை

புனிதராக்கும் மனிதர்கள்


கவலை ஏதுமின்றி

கலவரம் ஏதுமின்றி

இயற்கையைக் கொண்டாடும் புறாக்கள்


கோவிலை நம்பி இருக்கும் புறாக்களுக்கும்

கோவிலை நம்பி இருக்கும் மனிதர்களுக்கும்

ஒரு போலயில்லை நம்பிக்கை... 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக