பழக்கப்படுத்தப்பட்ட குதிரை
கட்டளைகளுக்குச் செவி கொடுக்கிறது
அகத்திலும் காட்டை காலி செய்து
நகரத்தை மெல்ல மெல்லக் குடியேற்றுகிறது
மரங்களைக் கண்டால்
மிரட்சியடையும் குதிரைகள்
பாதி மனிதராய் மாறிவிட்டது
மீதி மாறுவதற்குள்
காடு ஒரு குதிரை தேவதையை அனுப்பி
அதன் மனதை மாற்றிட வேண்டும்
காடு
காதல்
சுதந்திரம்
நாடு
நாம்
இயந்திரம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக