தாகம் தீராத கூழாங்கல்
நீரில் மூழ்கியது
கனவில்...
காற்றில் தேடிய ஈரத்துடன்
உச்சி வெயிலில்
உறவில்...
உள்ளங்கைகளில்
உதடுகளில்
உணர்ந்ததுண்டு
வேர்களில் பாயும்
குளிரில்...
ஆம்
இப்படித்தான் இப்படித்தான்
இதயக் கூழாங்கல்
உயிர்த்து இருக்கிறது
நினைவில்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக