விரலில் இல்லை
கித்தாரிலும் இல்லை
இறைவனிடத்திலிருந்து
இறங்கி வருவதுதான்
இசை...
இசையின் இறைவனிடம்
சரணடைந்தவன்
இசை ஞானி...
மனிதனாக
அவன் இருக்கும் போது
வம்பிழுப்பவர்களே...
அவன்
ஞானியாகும் நேரத்தில்
வந்திறங்கும் இறைவனை
சற்றே கேளுங்கள்
நிச்சயம் உங்கள் மனம் மாறும்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக