உன்னைப் பார்க்காதது போலவே
இருக்கும் பாவி நான்
நீ பார்க்காமல் போனால்
உன் பாதங்களில் வீழ்வேன்
அவ்வளவு தான் நான்
அதனால் தான் தள்ளியே நிற்கிறேன்
நீ பேசுவதை எல்லாமும்
ஒன்று விடாமல் சேகரிப்பேன்
சேகரித்த வார்த்தைகளில்
தனியாகப் பூமாலை கோர்ப்பேன்
நீ பார்க்காத போதெல்லாம்
கண்களில் உன்னைப் படம் பிடிப்பேன்
கனவினில் அவைகளைத்
தொகுத்து வைப்பேன்
உன் கண்களில்
விழ முடியும்
எழ முடியாது...
உன் கரங்களைத்
தொட முடியும்
விட முடியாது...
என்றே கற்பனைகளை வளர்த்து
வாழ்ந்து கொண்டிருக்கிறேன்
உன்னைப் பார்க்காதது போலவே
அவ்வளவு தான் நான்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக