சொன்னதையே
திரும்பத் திரும்பச் சொல்லுகிறாள்
அம்மா
இறைவனிடமும்
திரும்பத் திரும்பச் சொல்லுகிறாள்
எல்லாம் உனக்காகத்தான்
திரும்பத் திரும்பச் சொல்லுவதையே
அவள் வாழ்வாக்கிக் கொண்டாள்
திரும்பத் திரும்பக் கேட்காமல் போகும்
உனக்காகத்தான்...
திரும்பத் திரும்பச் சொல்லுகிறவளுக்காக
திரும்ப ஏதேனும் செய்
அவளின் கடவுள் நம்பிக்கையை காப்பாற்று
அவளோடு இப்போது இருப்பது
அந்தக் கடவுள் நம்பிக்கை
ஒன்றுதான்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக