குழந்தைகளை வளர்க்காதே
வாழ விடு
அன்பைக் கொடு...
ஓநாய்கள் வாழ்கிறது
தெரு நாய்கள் பிழைக்கிறது
வீட்டு நாய்கள் வளர்கிறது...
கூண்டில் வளர்க்கும் பறவைகள்
வானம் செல்லப் பயப்படும்
பாடத் தெரியாமல் கீச்சிடும்...
குழந்தைகளை வளர்க்காதே
வாழ விடு
அன்பைக் கொடு...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக