அடி வானம் விழுந்துகொண்டு
மேல் வானம் வளர்ந்துகொண்டு
நடு வானம் எரிந்துகொண்டு
கீழ் வானில் சில மேகம்
இங்கும் அங்கும் அலைந்துகொண்டு
அதைத் தொட்டுவிட மலைமுகடும்
மலை முகட்டில் மரக் கிளையும்
மரக் கிளையில் பச்சைக் கிளியும்...
தரையில் நின்று பார்க்கும் என்மேல்
ஒரு இறகும் விழுந்தது
மேகம் தொட பச்சைக்கிளி
அவ்வாறு அழைத்தது...
வானம் தொடும் முயற்சியிலே
பூமியில் இதயங்கள் கூடி வைக்கும்
மண்பானை வெல்ல அரிசிப் பொங்கல்
மனம் போலப் பொங்கி வழிகிறது
அமிர்தம் இனிப்பாக நாவை அணைக்கிறது
கண் மூடி வானத்தில் இணைக்கிறது...
எல்லோர்க்கும் அமிர்தம்
எல்லோர்க்கும் வானம்
இயற்கை இறைவன்
அவனே உழவன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக