மனதின் எல்லா படிநிலைகளிலும்
ஒரு பறவை தயாராக இருக்கிறது
எப்போது எது பறக்கும்
யாருக்கும் தெரியாது...
பறக்கும் போது பறக்கும்
கர்ணம் அடிக்கும்போது அடிக்கும்
மனப் பறவை சிறகை விரிக்கும்
நேரம் தெரியாது...
வயலை வாங்கிக் கொடுத்தாலும்
சில நெல் மணிகள் போதும்
அவை வானத்தோடு பழகியதால்
நம் போல் களவு தெரியாது...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக