பூனை தன் மயிர்களில்
காற்றை எண்ணும்
மரங்கள் தன் இலைகளில்
காற்றை எண்ணும்
ஒன்றிரண்டு குறைந்தாலும்
அவை கவலை கொள்வதில்லை
காற்று எண்ணும்
உயிர்கள் வாழ்நாளை
ஒன்றிரண்டு குறைந்தாலும்
அவையும் கவலை கொள்வதில்லை
கரன்சி எண்ணும் மானுடா
நாம் கவலை கொள்வது ஏனடா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக