மதில் மேல் ஏறாத
பூனைகளே இல்லை
மதில்களே இல்லாத ஊரில்
பூனைகளும் இல்லை
காட்டில் இருந்தவரை
மதில்கள் தேவைப்பட்டதில்லை
காட்டில் இருந்தவரை
எந்தப் பூனையும் திருடியதில்லை
மனிதன் கட்டிய மதில்கள் தான்
பூனைக்கு திருட்டைச் சொல்லிக் கொடுத்தது
மறைந்து வாழ
தனித்து வாழ
என எல்லாம் கற்று
வாழத் தெரியாமல் போனது...
புதிய மதில் மேல் ஏறி
பழைய காட்டையும்
பழைய மதில் மேல் ஏறி
புதிய காட்டையும்
தேடி அலைகிறது
இந்தப் பூனைகள்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக