குழந்தை
மண்ணைக் கைக் கோர்த்து
நண்பன் ஆக்கும்
வானில்
அதைத் தூவி
மேகம் ஆக்கும்
மேகம்
மழைத் துளியாய்
மண் துகள் தூவும்
கண்ணில்
விழுந்து விட
பகை பூக்கும்
பகை
சிறு புகையெனவே
உதிர்ந்து போகும்
மீண்டும் நட்பு
மீண்டும் பகை
மீண்டும் மீண்டும் குழந்தை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக