இலையும் கிளையும்
நான் நடப்பதைப் போலவே
நடந்து காட்டியது
மரத்தைப் போல அசையாமல்
நானும் சிலை போல்
நின்று காட்டினேன்
இலையும் கிளையும் நடிக்கவில்லை
நான் நடிக்கிறேன்
இயற்கையாக...
இலையும் கிளையும்
நான் நடப்பதைப் போலவே
நடந்து காட்டியது
மரத்தைப் போல அசையாமல்
நானும் சிலை போல்
நின்று காட்டினேன்
இலையும் கிளையும் நடிக்கவில்லை
நான் நடிக்கிறேன்
இயற்கையாக...
மதில் மேல் ஏறாத
பூனைகளே இல்லை
மதில்களே இல்லாத ஊரில்
பூனைகளும் இல்லை
காட்டில் இருந்தவரை
மதில்கள் தேவைப்பட்டதில்லை
காட்டில் இருந்தவரை
எந்தப் பூனையும் திருடியதில்லை
மனிதன் கட்டிய மதில்கள் தான்
பூனைக்கு திருட்டைச் சொல்லிக் கொடுத்தது
மறைந்து வாழ
தனித்து வாழ
என எல்லாம் கற்று
வாழத் தெரியாமல் போனது...
புதிய மதில் மேல் ஏறி
பழைய காட்டையும்
பழைய மதில் மேல் ஏறி
புதிய காட்டையும்
தேடி அலைகிறது
இந்தப் பூனைகள்...
சுதந்திரத்தின் அர்த்தத்தை தேடுகிறேன்
சுதந்திரமாய் இருந்த நினைவுகள்
மழலையாய் சிரிக்கிறது
சிறைக் கம்பிகளுக்கு அப்பால்
சுதந்திரத்தின் அர்த்தத்தை தேடுகிறேன்
சுதந்திரமாய் இரு பறவைகள்
பறந்து செல்கிறது
சிறைக் கம்பிகளுக்கு அப்பால்
சுதந்திரத்தின் அர்த்தத்தை தேடுகிறேன்
சுதந்திரமாய் பல இலைகள்
நடனம் ஆடுகிறது
சிறைக் கம்பிகளுக்கு அப்பால்
சுதந்திரத்தின் அர்த்தத்தை தேடுகிறேன்
சுதந்திரமாய் இருக்கும் அனைத்தும்
என்னைப் பார்க்கிறது
சிறைக் கம்பிகளுக்கு அப்பால்...