வியாழன், 7 ஏப்ரல், 2022

 

வண்ண மீன்களை
கண்ணாடித் தொட்டிக்குள் பார்த்திருந்தேன்
அந்தக் கடவுளின் கருவறையை சுற்றிச் சுற்றி வந்து தரிசிக்கிறேன்
கடவுளும் ஆயிரம் வேலைகளுக்கு நடுவிலும்
என்னையும் கண்ணாடியில் ஊடுருவி பார்க்கிறார்
என் உள் பார்க்கத் தெரிந்த அவர் கடவுள்
புறம் மட்டும் பார்த்துப் புலம்பும் நான் பக்தன்
யார் சொன்னது என்னை நாத்திகன் என்று...
நானே மறுக்கிறேன்
நானே ஏற்கிறேன்
நானே கடவுளின் பழியை தூக்கிச் சுமக்கிறேன்
நானே கடவுள்
நானே பேய்
நானே மீன்
என்னைச் சுற்றியும் கண்ணாடிச் சிறை
எங்கே போனது என் கடல்...
மரண அடி
உடையும் உடல்
உடையும் கண்ணாடி
உயிர்க்கும் ஓர் பாற்கடல்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக