யானை புகுந்து மறைந்தது
ஒரு பெரிய யானைக்குள்
விளக்கெடுத்து உற்றுப் பார்த்தேன்
கரும் பூனையைப் போல்
துள்ளி ஓடி மறைந்தது
பெரிய யானை
தனது காதாட்டி நிற்கிறது
உள்ளே புகுந்த யானை
தூரத்தில் மெல்ல நகரும்
அந்தக் கன்னங்கரிய
பெரிய யானை
பகல் வந்து சேரும்போது
பாதி உலகை கடந்திருக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக