திங்கள், 4 ஏப்ரல், 2022

 

கால ஓவியன் கைகளில்
நானும் ஓர் ஓவியம்
ஒவ்வொரு கோட்டிலும் உயிர் பூத்து
ஏதோவொரு கோட்டில் உதிரும்

அவன் தூரிகை உதறிடும் போதெல்லாம்
துளித் துளியாய்
சில உறவுகள் சிதறும்...

உதறும் தருணமெலாம் பதறிய மனது
மௌனம் ஆனது
நீ மாயமானதிலிருந்து...

சிதறிப் போனாயா
உதறிப் போனாயா
தூரிகைக்கும் இல்லை வெளிச்சம்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக