பிறக்கும் போதே சிலுவை
இருந்தும் சிரிக்கும் ரோஜா
மண்ணில் நமக்கான தேவ தூது
பார்க்கும் போதெல்லாம்
நம் பாவங்களை கழுவிடும்
பரம பிதா
முட்களில் நின்றுகொண்டு
முத்தம் தந்திடும்
உலக மாதா
தனிமையின் தோள்களில்
இனிமையை படரவிடும்
இறை நட்பு
வானம் அன்னாந்து பார்க்க
மண்ணில் அன்யோன்யமாய் பூக்கும்
நிலவு ரோஜா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக