ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

 


பிறக்கும் போதே சிலுவை
இருந்தும் சிரிக்கும் ரோஜா
மண்ணில் நமக்கான தேவ தூது

பார்க்கும் போதெல்லாம்
நம் பாவங்களை கழுவிடும்
பரம பிதா

முட்களில் நின்றுகொண்டு
முத்தம் தந்திடும்
உலக மாதா

தனிமையின் தோள்களில்
இனிமையை படரவிடும்
இறை நட்பு

வானம் அன்னாந்து பார்க்க
மண்ணில் அன்யோன்யமாய் பூக்கும்
நிலவு ரோஜா...




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக