திரும்பிடாத இந்த நொடியிலிருந்து
வாராத அந்த நொடிக்கு
விருட்டெனத் தாவுகிறது
ஒரு பறவை
ஒரு பட்டாம்பூச்சி
ஒரு தவளை
திரும்பிடாத இந்த நொடியிலேயே
இல்லாத இந்த சிறையிலேயே வாழ்கின்றன
எனது கண்கள்
சிறைக்கு இந்தப் பக்கமா
அந்தப் பக்கமா
என்றுதான் தெரியவில்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக