தேவதை என்ற சொல்
என்னுள் நுழைந்து வரையும் ஓவியம்
ஒன்று இவள்
இன்னொன்று அவள்
அழகு மட்டுமல்ல
இரகசியங்களும் சேர்ந்து இருக்கும்
அந்த ஓவியத்தில்
ஒரு கண்ணின் இரகசியம்
மறு கண்ணிற்கும் தெரியாது
ஒளி தொடும்போது
ஒளிந்து பார்க்கிறேன்
மழை தொடும்போது
மறைந்து பார்க்கிறேன்
இருள் தொடும்போது
கண்மூடி பார்க்கிறேன்
நான் தொடும்போது
கனவில் பார்க்கிறேன்
தேவதை என்ற சொல்
என்னுள் நுழைந்து வரையும் ஓவியம்
சொல் மறைந்து போய்விடினும்
ஓவியம் அழிந்து போவதில்லை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக