தொட்டுத் தொட்டு
வரைந்த குதிரை
வளர்த்த குதிரையைப் போல்
வாழ்ந்து வருகின்றது
ஓவியனோடு
தொட்டுத் தொட்டு
அணைத்த காதலி
பிரிந்து மனதினில் போல
வாழ்ந்து வருகின்றது
ஓவியனோடு
கனவில் சுமந்து
நினைவில் கீழே தள்ளும்
சுகமான பயணம்
சுமையான தருணம்
இரண்டையும் தாங்கி நிற்கும்
அந்த ஓவியம்
வாழ்ந்து வருகின்றது
ஓவியனோடு
கடிவாளம் போடாதவனை
எந்தக் குதிரையும்
கொஞ்சம் அதிகம் நேசிக்கும் தானே
ஓவியனால் வாழும்
ஓவியங்கள்
ஓவியங்களால் வாழும்
ஓவியன்
நம்மால் வாழும்
கடவுள் போல...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக