திங்கள், 1 ஆகஸ்ட், 2022


சிறைபட்ட சிறுத்தையிடம்
சிறகுகள் வேண்டுமா என்று
கடவுள் கேட்கிறார்

தன் தோலை உரித்து
கடவுள் கையில் கொடுத்து
சிறுத்தை சிரித்தது

அதன் பற்களைப் பார்த்த கடவுள்
பக்குவமாய் அதை கேட்பதற்கு
சிரித்துக்கொண்டே வார்த்தைகளை தேடினார்...



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக