சிறகில்லாமல் பறந்து வந்த மீனுக்கு
உன் பார்வையில் பட்டதும்
சிறகு முளைத்தது
சிறகு அசைக்கும்
உன் பார்வை பரவசத்தில்
பறப்பதில்லை அது எப்போதும் உன் வசத்தில்
நீரும் மறந்தது
வானைத் துறந்தது
உன் பார்வையிலேயே தவம் கிடக்குது
என்னை மறந்து
என்னைத் துறந்து
உன் பார்வைக்காகவே தவம் கிடக்கிறேன்
தூண்டில் இல்லாமல்
நீ பிடிக்கிறாய்
இருந்தும் ஏனோ வலி கொடுக்கிறாய்
அருகில் நின்று துடிக்கும் மீன்
எதிரில் நின்று துடிக்கும் நான்
எளிதில் பார்வை பார்க்காமல் நீ
விழி பாராயோ
வழி தாராயோ
கண்ணம்மா
விழி என்று சொல்வது
வழி மறந்து நிற்பது
அந்த மீனும் எதிரில் நானும்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக