மீன் பிடிக்கக் காத்திருக்கும்
கொக்கைப் போல காத்திருக்கிறேன்
ஒரு சொல் பிடிக்க...
நிஜம் காத்திருக்கிறது
உன் நிழல் பிடிக்க...
நிலவு இல்லாத இரவில்
நீயும் வந்து போகிறாய்...
தவமிருக்கும் தருவைப் போல
இருந்து பார்க்கிறேன்
காற்றைப் போல நீயும் வந்து
கலைத்துப் போகிறாய்...
வானம் போல கண்களை
நான் திறந்து வைக்கிறேன்
மேகத்தை நீ தூதனுப்பி
மழையைத் தருகிறாய்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக