உரிமையோடு பழகும் நண்பர்கள்
ஊரைக் காலி செய்துவிட்டார்கள்
வாங்க போங்கன்னு
எங்கோ தூரத்திலிருந்தே உரையாடல்
எனக்காக இதைக் கட்டினேன்
எனக்காக இதை வாங்கினேன்
எனக்காக எனக்காக என்று
பேசப் பழகிக் கொண்டார்கள்
உனக்கானவன் நான்
என்பதை மறந்து போனவர்களே...
உலகம் விட்டுப் போகும்வரை
நான் உனக்கானவன்தான்!
மாளிகைச் சுவர்களுக்குள்
மண் சுவர்களுக்குள்
வாழ்ந்தது போதும்
நம் குட்டிச் சுவர் காத்திருக்கிறது
வந்து சேருங்கள்
இது என் ஊர்
எனும் நினைப்பே
நீங்கள் தந்ததுதான்
ஊர் வந்து சேருங்கள்
இந்த உலகம் விட்டுப் போகும்வரை
நம் ஊரில்தான் இருப்பேன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக