ஒவ்வொரு நாளும்
கடைசிக் கண்மூடலை
தெரிந்து வைத்திருக்கிறாய்
இமைகள் மூடிடும்
அந்த நாழிகையில்
நான் பார்க்காத வண்ணம்
உள் நுழைகிறாய்
இருளை மெல்ல மெல்ல விலக்கி
முகம் காட்டுகிறாய்
முதலில் பார்த்த பரவசத்தை
இதயத்தில் நிரப்புகிறாய்
உலகம் நிரம்பி விடிகிறது...
வாழ்வின் கடைசி கண்மூடலில்
வந்து நுழைவாயா...
இருளில் தனியாக விட்டுவிடுவாயா...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக